கரூர் கோவில் திருவிழா - பக்தர்கள் கூட்டம்
கரூர்:
கரூர், தாந்தோனி மலையில் உள்ள அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கரூர், தாந்தோனி மலையில் அருள் மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கரூர் மட்டும் இன்றி அருகில் உள்ள திருச்சி, திண்டுக்கல், சேலம், கோவை போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இங்கு வரும் பக்தர்கள் படிப்பு, கடன் பிரச்சனை, நிலப்பிரச்சனை, திருமண தடை போன்றவற்றை தீர்த்து தருமாறு வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு மொட்டை போட்டும், பொருட்கள் வாங்கி வைத்தும் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
இந்த ஆண்டு விழாவையொட்டி இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் பாதூகாப்பை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.