குலுக்கல் ஆட்டத்துக்குத் தடை
மதுரை:
கோவில் விழாக்களின்போது நடத்தப்படும் இசைக் கச்சேரிகளில் குத்தாட்டம், குலுக்கல் ஆட்டம் போன்ற ஆபாச நடனங்களுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். மாறாக, பரதநாட்டியம் உள்ளிட்ட கலாச்சார நடனங்களை ஆடலாம் என அறிவித்துள்ளனர்.
மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் கோவில் விழாக்களின்போது இசைக் கச்சேரிகள் நடைபெறும். இதில் குத்தாட்டப் பாடல்களுக்கு ஆபாசமாக ஆடுவது அதிகரித்து வந்தது. மேலும் ரெக்கார்டு டான்ஸும் படு பிரபலமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிகள் நள்ளிரவையும் தாண்டி நடைபெறும். அப்போது பெண்கள் யாரும் இல்லாமல், ஆண்கள் மட்டுமே இந்த ஆட்டம் பாட்டங்களைக் கண்டு களிப்பார்கள். பெரும்பாலும் ஆபாச களஞ்சியமாக மாறி வந்த இந்த ஆபாச ஆட்டங்களைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வந்தது.
இந்த நிலையில் தற்போது இதுபோன்ற ஆபாச ஆட்டங்களுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையர் ராமராஜன் கூறுகையில்,
ரெக்கார்ட் டான்ஸ் மற்றும் ஆபாச ஆட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு இனி அனுமதி கிடையாது. கோவில்களிலும், கோவில் விழாக்களிலும் இனிமேல் இதுபோன்ற ஆட்டங்கள் அனுமதிக்கப்படாது.
மாறாக, பரதநாட்டியம், கதகளி, மெல்லிசைக் கச்சேரி உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications