For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாழ் பல்கலைக்குள் நுழைந்த ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News


வவுனியா:

வன்னிப் பகுதியில் தமிழர்கள் குடியிருக்கும் பகுதிகளில் இலங்கை விமானப் படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

வன்னியில் உள்ள முத்தையன்காடு என்ற இடத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் திடீரென இலங்கை விமானப் படையின் கேபிர் ரக விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.

இருமுறை நடந்த இந்த குண்டு வீச்சுத் தாக்குதலில் 8 குண்டுகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. வீடுகளும் சேதமடையவில்லை.

குண்டு வீச்சு காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

யாழ் பல்கலைக்குள் நுழைந்த ராணுவம்:

இதற்கிடையே, புதன்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த வருடாந்திர மாணவர் கூட்டத்தை ராணுவம் சோதனை என்ற பெயரில் சீர்குலைத்தது.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்டுதோறும் மாணவர் சந்திப்பு நடைபெறும். இந்த ஆண்டு சந்திப்பு நேற்று நடந்தது. அப்ேபாது ராணுவ வீரர்கள் பல்கலைக்கழகத்தை சூழ்ந்தனர்.

பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அங்கு ேசாதனையிட்டனர். மாணவர்களிடமும் சோதனை போட்டனர். இதனால் மாணவர் சந்திப்பு கூட்டம் சீர்குலைந்தது.

பின்னர் மாணவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X