சென்னையில் ஆனந்த்துக்கு சிறப்பான வரவேற்பு
சென்னை:
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று தாயகம் திரும்பியுள்ள விஸ்வநாதன் ஆனந்த்துக்கு சென்னையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்றுள்ள ஆனந்த், சில நாட்களுக்கு முன்பு டெல்லி திரும்பினார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் ஆனந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மேலும், பெரும் திறளான சிறார்கள், ரசிகர்கள், ஆனந்த்தின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அடையாறு அழைத்து வரப்பட்டார் ஆனந்த்.
அங்கு வந்த பின்னர் பெசன்ட் நகரில் உள்ள அவரது வீடு வரை திறந்த சாரட் வண்டியில் ஆனந்த் அழைத்துச் செல்லப்பட்டார். வழியெங்கும் பெரும் திரளானோர் கூடி ஆனந்த்தை வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications