ஷார்ஜா விபத்தில் 2 இந்திய சிறுமிகள் பலி!
துபாய்:
ஷார்ஜாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 இந்திய சிறுமிகள் பலியானார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர்களுடைய தாயார் படுகாயமடைந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஹரூண் ரஷீத் (35). இவர் தனது மனைவி பபீனா கப்பன் (25), மற்றும் மகள்கள் ஆயிஷா தியா, தினா ருக்கியா ஆகியோருடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார். சாப்ட்வேர் என்ஜீனியராக ஹரூண் பணியாற்றி வருகிறார்.
குடும்பத்தோடு காரில் போய்க் கொண்டிருந்தார் ஹரூண். அப்போது தூக்கம் வருவது போல இருந்ததால் காரை சாலையிலிருந்து ஓரமாக நிறுத்தி விட்டு முகம் கழுவியுள்ளார்.
அந்த சமயம் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் குழந்தைகள் இருவரும் வெளியே தூக்கி எறியப்பட்டு லாரிக்குள் சிக்கி பரிதாபமாக பலியானார்கள்.
பபீனா கப்பன் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காப்பாற்ற உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
பபீனாவும், அவரது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையும் உயிருக்கப் போராடி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஹரூண் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications