காளிக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த பக்தர்!!

Subscribe to Oneindia Tamil


லக்னோ:

தனது விருப்பத்தை காளி தேவி நிறைவேற்றியதால், காளிக்கு தனது நாக்கை கத்தியால் துண்டித்து காணிக்கையாகக் கொடுத்தார் ஒரு பக்தர்.

உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் பிரதீப் ராவத் (25). தீவிர காளி பக்தரான இவர், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றினால் நாக்கை காணிக்கையாக கொடுப்பதாக காளியிடம் வேண்டிக் கொண்டார்.

இந்த நிலையில் பிரதீப் ராவத் வேண்டியது நடந்து. இதற்கு காளிதேவிதான் காரணம் என மகிழ்ச்சி அடைந்த பிரதீப் ராவத், வாக்கு அளித்தபடி நாக்கைக் காணிக்கையாகக் கொடுக்க முடிவு செய்தார்.

மஹிபல்லபூர் என்ற இடத்தில் உள்ள காளி கோவிலுக்கு சென்றார். அம்மன் முன்பு நின்று பய பக்தியுடன் வணங்கிய அவர், கோவில் பூசாரி, கருவறையிலிருந்து வெளியே சென்று பக்தர்களிடம் பிரசாதம் கொடுத்தபோது, டக்கென்று உள்ளே போய் கதவை மூடிக் கொண்டார்

இதைப் பார்த்த அனைவரும் குழம்பினர். என்ன செய்யப் போகிறார் பிரதீப் என்று புரியாமல் நின்றனர். தகவல் பறந்து கோவில் பாதுகாவலர்கள் விரைந்து வந்து கதவைத் திறக்குமாறு கூறினர். ஆனால் பிரதீப் கதவைத் திறக்கவில்லை.

பின்னர் போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது பிரதீப், கத்தியால் தனது நாக்கை அறுத்து காளியின் பாதத்தில் வைத்திருந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.

உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அறுபட்ட நாக்குடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். துண்டிக்கப்பட்ட நாக்கை மீண்டும் ஒட்ட வைக்கும் அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர். அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+