யு.ஏ.இ. இந்தியர்கள் ரத்ததானம்
Subscribe to Oneindia Tamil
ராஸ் அல் கய்மா (யு.ஏ.இ.):
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல் கய்மா பகுதி இந்திய சங்கத்தின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாமை நடத்தினர்.
நவராத்திரியை முன்னிட்டு இந்த ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. சகர் மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் இந்தியர்கள் இந்த ரத்ததான முகாமை நடத்தினர்.
இதுகுறித்து இந்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரசாத் கூறுகையில், அக்டோபர் 13ம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்கியது. இதுதொடர்பான விழா நகீல் பகுதியில் உள்ள இந்திய பள்ளியில் நடந்தது.
தினசரி இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தாண்டியா, இசை நிகழ்ச்சிகள், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கு முத்தாய்ப்பாக ரத்ததான முகாம் நடத்தப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications