அஜ்மீர் குண்டுவெடிப்பு-ஒருவர் கைது
அஜ்மீர்: அஜ்மீர் தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்குள்ள உலகப் புகழ்பெற்ற சூஃபி புனிதத் தலமான காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்ஹாவில் கடந்த 11ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவன் எனக் கருதப்படும் நபரின் படத்தை நேற்று போலீசார் வெளியிட்டிருந்தனர்.
இந் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு புதரில் மறைந்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரது பெயர் அஹ்மத் முஜ்ஜுதீன். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இவருக்கும் ஆஜ்மீர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications