Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.30 லட்சம் எரிசாராயம் பறிமுதல்-ஒருவர் கைது, கார்களும் பிடிபட்டன

Subscribe to Oneindia Tamil

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் பழவூர் அருகே இன்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 321 எரி சாராய கேன்கள் பிடிபட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடகம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை வழியாக கேரளாவுக்கு தொடர்ந்து எரிசாராயம் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு எரிசாராய கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே குறிச்சான்பட்டி கோழிப்பண்ணையிலும், பணகுடியிலும் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பிடிப்பட்டது.

போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் எரிசாராயம் கடத்துபவர்கள் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊருக்கு ஓதுக்குபுறமான தோட்டங்கள், மற்றும் பாழடைந்த வீடுகளில் எரிசாராயத்தை மொத்தமாக பதுக்கி வைத்திருக்கின்றனர்.

லாரிகளில் கடத்தினால் போலீசாரிடம் சிக்கி கொள்கிறது என்பதால் அதனை சிறிய அளவில் கேன்களாக பிரித்து கார்கள் மூலம் கேரளாவிவிற்கு கடத்தி செல்கின்றனர்.

நெல்லை மாவட்டம் தெற்கு கருங்குளம் சங்கனாபுரம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி ஸ்ரீதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஏ.டி.எஸ்.பி மாணிக்க ராவ் தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தோட்டம் அமைந்துள்ள காட்டு பகுதிக்குச் சென்று பதுங்கியிருந்தனர்.

அப்போது 2 சான்ட்ரோ கார்கள் தோட்டத்தினுள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள மோட்டார் ரூம் அருகே அதனை நிறுத்தி எரிசாராய கேன்களை அதன் டிரைவர்கள் காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த போலீசார் 2 கார்களையும் சுற்றி வளைத்தனர்.

ஒருவர் ஓடிவிட்டார். மற்றொரு கார் டிரைவரான செல்வம் என்பவர் மட்டும் பிடிபட்டார்.

பின்னர் அங்கு நடத்திய அதிரடி சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 321 எரிசாராய கேன்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சான்ட்ரோ கார்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.30 ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+