மதுக் கடத்தல்: தமிழக, புதுவை அதிகாரிகள் ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதைத் தடுப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகியவற்றில் புதுச்சேரியிலிருந்து சரக்கு கடத்தி வரப்படுவது வழக்கம். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படும் எரிசாராயமும் இங்கு அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதைத் தடுப்பது தொடர்பாக புதுச்ேசரியில் இரு மாநில அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தமிழக மது விலக்கு டிஜிபி மசீரமுத்து தலைமை தாங்கினார். புதுச்சேரி கலால் பிரிவு கலெக்டர் தேவநீதி தாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் இரு மாநிலத்திலும் உள்ள முக்கிய குற்றவாளிகள் பட்டியலையும் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.