சிவராஜ் பாட்டீல் சரியில்லை - லாலு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலால் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்கவே முடியாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நாட்டில் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை அப்படியே விட்டு விடக் கூடாது. இதற்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
தீவிரவாதம், கலவரங்களை ஒடுக்கும் முக்கிய பொறுப்பு உள்துறைக்கும், பாதுகாப்பு துறைக்கும் உண்டு. ஆரம்பத்தில் இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றுக்கு நான் அமைச்சராக விரும்பினேன்.
தற்போதுள்ள மத்திய உள்துறை அமைச்சர் பலவீனமானவர். அவரால் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அது அவரால் இயலாத காரியம் என்று பாட்டீலை தாக்கியுள்ளார் லாலு.












Click it and Unblock the Notifications