கமுதியில் போலீசாருக்கு அடி-உதை, கும்பல் தப்பியோட்டம்!
கமுதி: கமுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போலீசாருக்கு அடி-உதை விழுந்தது. போலீசரை தாக்கிவிட்டு தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
கமுதி கூடுதல் போலீஸ் எஸ்பி நரேந்திர நாயர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வேகமாக ஒரு ஜீப் வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் ஜீப் உடனே நிற்காமல், சிறிது தூரம் தள்ளி நின்றது. இதனால் போலீசாருக்கும் ஜீப்பில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அது மோதலாக மாறியது.
இந் நிலையில் ஜீப்பில் இருந்தவர்கள் எஸ்பி நரேந்திர நாயர் மற்றும் போலீசாரை தாக்கினர். இதில் போலீசார் சத்தியயேந்திரன், ராஜாராம், நெல்லையை சேர்ந்த சிறப்பு காவல் படையை சேர்ந்த வில்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
போலீசாரை தாக்கிய அக்கும்பல் தப்பி ஒடிவிட்டது. அப்போது அவர்கள் வந்த ஜீப்பையும் விட்டு விட்டு ஒடிவிட்டனர். போலீசார் அந்த ஜீப்பை கைப்பற்றினர்.
காயமடைந்த போலீசார் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடத்தியவர்கள் கமுதியை சேர்ந்த ராமபாண்டி, நல்லமருது, தர்லிங்கம் உள்ளிட்ட 13 என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications