உரிமை மீறல்: ஜெ. மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சமீபத்தில் ஜெயலலிதா அளித்த ஒரு பேட்டியில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைக் கொல்ல சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து சட்டசபை மழைக் காலக் கூட்டத் தொடரின்போது ஜெயலலிதா மீது அமைச்சர் ஸ்டாலின் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்.
இந்தப் பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், உரிமைக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தார்.
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தலைமையிலான உரிமைக் குழு கூடி இது தொடர்பாக விவாதித்தது. விவாதத்தின் இறுதியில், ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உரிமைக் குழு தீர்மானித்தது.
அதன்படி ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக நேரிலோ அல்லது உரிய முறையிலோ விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில் சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிமை மீறல் பிரச்சனை குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications