சென்னையில் பிரதீபா பாட்டீல் - உற்சாக வரவேற்பு
சென்னை: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று முற்பகல் சென்னைக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்த பிரதீபாவுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, நிதியமைச்சர் அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பிரதீபாவை வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதீபா பாட்டீல் கலைவாணர் அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடைபெற்ற அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
தனது டெல்லி பயணத்தை முடித்து விட்டு இன்று பிற்பகலே பிரதீபா பாட்டீல் டெல்லி திரும்பிச் செல்கிறார்.
பிரதீபா வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications