பிபிஓ ஊழியை கற்பழித்துக் கொலை - 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
புனே: புனே நகரில் உள்ள பிபிஓ அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணை கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை-புனே நெடுஞ்சாலையில் வாடகன் என்ற இடத்தில் நேற்று மாலை ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. தகவல் கிடைத்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் புனேவில் உள்ள விப்ரோ கால் சென்டரில் வேலை பார்த்து வந்த ஜோதி சவுத்ரி(22) என்று தெரிந்தது. இவரை இருவர் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து ரோட்டில் உடலை வீசி விட்டு சென்றுள்ளனர்.
அந்த நிறுவனத்திற்கு வாடகைக்கு வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் தான் இந்த கொடூர செயலை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக கற்பழித்து கொலை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications