இளம் பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த கும்பல்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இவர் ஒரு துணிக் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பினார். மழையால் ஒரு இடத்தில் நின்றுவிட்டு கிளம்பினார். இரவு வெகு நேரமாகி விட்டதால் தனது கடைக்கு அருகில் உள்ள டீ கடையில் வேலை செய்யும் முரளி என்பவரின் துணையுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஏரிக்கரை அருகில் உடையநாட்டைச் சேர்ந்த சேக் அப்துல்லா, முகமது பதக், சேக் தாவூத், சேக் அப்துல்லா ஆகியோர் கொண்ட கும்பல் முரளியை அடித்து உதைத்து விரட்டியது. அதன் பின்னர் கொட்டும் மழையில் வைதேகியை தூக்கிச் சென்ற அந்த கும்பல் கற்பழித்துள்ளது.

அதற்குள் ஊருக்குள் சென்று விஷயத்தை சொல்லி மக்களை திரட்டிக் கொண்டு வந்தார் முரளி. பொது மக்கள் அந்த நான்கு பேரையும் அடித்து துவைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+