பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் ஸ்டேட் வங்கி !
Subscribe to Oneindia Tamil
மதுரை: வசதியற்ற பெண் குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
குழந்தைகள் தின விழா வரும் 14 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு வசதியற்ற, ஆதரவற்ற, நன்கு படிக்கும் குழந்தைகளை தத்தெடுக்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
இத் திட்டத்தின்படி தமிழகத்தில் அந்தந்தப் பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஸ்டேட் வங்கிகள் தத்தெடுக்கும்.
இது குறித்த விபரங்களை வங்கி நிர்வாகம் சேகரித்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைள் பயன் பெறுவர்.
1ம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஆகும் கல்வி, உணவு, உடை, தேர்வு கட்டணத்தை ஸ்டேட் வங்கி கவனித்துக் கொள்ளும்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெண் குழந்தைக்கு சராசரியாக ரூ. 1500 முதல் ரூ. 5,000 வரை செலவு செய்ய வங்கி திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications