உயர்நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவற்றில் தற்போது 42 நீதிபதிகள் உள்ளனர். இந் நிலையில் சென்னை செஷன்ஸ் நீதிபதி பெரியகருப்பையா, உயர்நீதிமன்றப் பதிவாளர் வேணுகோபால், புதுவை நீதிபதி சசிதரன் ஆகியோர் புதிய உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
மூன்று நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
பதவியேற்பு விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications