வைகோ, பழ. நெடுமாறன் புழல் சிறையில் அடைப்பு
சென்னை: சுப.தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலத்தை நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆகியோர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் சமீபத்தில் இலங்கை விமானப்படையினரால் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை பல்வேறு தமிழக கட்சிகள் கண்டித்திருந்தன. முதல்வர் கருணாநிதியும் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானித்தன. இந்த ஊர்வலத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
ஆனால் இந்தப் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. இந்த நிலையில் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. ஆனால் தடையை மீறி பேரணியை நடத்துவோம் என பழ.நெடுமாறனும், வைகோவும் அறிவித்தனர்.
அதன்படி நேற்று மாலை சென்னை மன்ரோ சிலை அருகே வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் கூடிய நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழ்ச்செல்வனின் படங்களைக் கையில் ஏந்தியபடி வந்தனர்.
ஆனால் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 360 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 14 பேர் பெண்கள் ஆவர்.
பின்னர் எழும்பூர் 6வது குற்றவியல் பெருநகர நீதிபதி மைதானத்திற்கு வந்தார். அங்கு அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் பெரியார் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஆனைமுத்து என்பவரை மட்டும் அவருடைய வயது காரணமாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
வைகோ உள்ளிட்டோர் மீது மீது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றது, தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது ஆகிய குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து வைகோ, பழ.நெடுமாறன் உட்பட அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications