ஐஜி சைலேந்திரபாபுவுக்கு டாக்டர் பட்டம்!

Subscribe to Oneindia Tamil

Shylendra Babuகரூர்: கரூர் காகிதபுரம், காகித ஆலையில் பணிபுரியும் ஐஜி சைலேந்திர பாபுவுக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

தமிழகத்தின் மிகச் சிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் சைலேந்திர பாபு. விஜய்குமாருக்கு இணையான திறமையும் வேகமும் நிறைந்தவர். ஆனால், இருவருமே அதிமுகவுக்கு நெருக்கம் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டதால் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஓரங்கட்டப்படுவது வழக்கம்.

அந்த வகையில் விஜய்குமாரோடு சேர்த்து சைலேந்திர பாபுவும் இப்போது முக்கியத்துவம் இல்லாத பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் கொடுத்த வேலையில் நேர்மையையும் திறமையும் வெளிப்படுத்தும் அதிகாரி இவர்.

இப்பேது கரூரில் உள்ள காகிதபுரம் காகித ஆலையில் ஐஜியாக பணியாற்றுபவர் சைலேந்திர பாபு நான்கு வருடங்களாக குழந்தைகள் காணாமல் போவது பற்றியும், அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் பற்றியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

தனது ஆய்வறிக்கையை சென்னை பல்கலைக்கழத்தில் சமர்பித்தார். இதனை பல்கலைகழகம் ஏற்றுக்கொண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

போலீஸ் துறையில், உள்ள ஐஜி ஒருவர் சமூக சிந்தனையோடு குழந்தைகள் பற்றி ஆய்வு நடத்தியது பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+