கண்ணாடி டம்ளர் மீது தலைகீழாக நின்று கராத்தே வீரர் சாதனை!
விழுப்புரம்: கண்ணாடி டம்ளர் மீது தலைகீழாக நின்று விழுப்புரத்தை சேர்ந்த கராத்தே வீரர் சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை மேலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெட்லீ(30). இவர் சிறு வயது முதலே கராத்தே மீது ஆர்வம் கொண்டு பயின்று வந்தார். பின்பு கராத்தே ஆசிரியராக ஆனா ஜெட்லீக்கு ஏதாவது ஒரு சாதனை செய்யவேண்டும் என்பது சிறுவயது முதல் லட்சியமாக இருந்ததாம்.
இதனால் இவர் கண்ணாடி டம்பளர் மீது தலைகீழாக நிற்க முடிவு செய்தார். அற்கான பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டு வந்தார்.
இது நாள் வரை ராணுவவீரர் ஹர்ஜிந்தர் மூன்று கண்ணாடி டம்ளரில் தலைகீழாக நின்றது தான் லிம்கா சாதனையாக கருதப்பட்டது . அதை முறியடிக்க ஆசைப்பட்டார் ஜெட்லி.
அதற்காக, இன்றுகாலை 11.45 மணிக்கு மணலூர் அரசு பள்ளி வளாகத்திற்கு வந்த ஜெட்லி பொது மக்கள், முக்கியஸ்தர்கள், முன்னிலையில் மூன்று கண்ணாடி டம்ளரில் தலைகீழாக நான்கு நிமிடங்கள் நின்று சாதனையை செய்தார்.
இதனை கண்டு வியந்த ஊர் மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இவரது சாதனையை லிம்கா புத்தகத்திற்கு அணுப்பி வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications