பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக சூம்ரோ பதவியேற்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக நாடாளுமன்ற மேல் சபைத் தலைவர் மொஹம்மதமியான் சூம்ரோ இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நெருக்குதலாலும், உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாலும், ஜனவரி முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் முஷாரப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இடைக்கால அரசை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் முஷாரப். முதல் கட்டமாக நேற்று இடைக்கால பிரதமரை அவர் அறிவித்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் சபையின் தலைவராக இருக்கும் முகம்மதமியான் சூம்ரோ, தற்காலிக பிரதமராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு இன்று முஷாரப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2 மாதங்களுக்கு சூம்ரோ பிரதமராக செயல்படுவார். சூம்ரோ தவிர இடைக்கால அமைச்சரவையும் பதவியேற்றது.
பதவியேற்பு விழாவில் முன்னாள் பிரதமர் செளகத் அஜீஸ், அமைச்சர்கள், நாடாளுமன்ற சபாநாயகர் செளத்ரி அமீர் ஹுசேன், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், ராணுவத் தளபதிகள், அரசியல் தலைவர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications