தேவகோட்டை-7 வழிப்பறி கொள்ளையர்களுக்கு கடுங்காவல்!
தேவகோட்டை: தேவகோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளையடித்து வந்த 7 பேருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூரில் எலக்ட்ரீகல் கடை வைத்து இருப்பவர் ரத்தினசாமி. இவர் கடந்த 2005ம் ஆண்டு தனது மனைவி கல்யாணியுடன் கொல்லங்குடிக்குச் சென்று கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கல்லல் என்ற இடத்தில் காரில் வந்த 7 போர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இது குறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து மானாமதுரையை சேர்ந்த சுந்தரம், முத்துராமன், ரவி, பாக்கியராஜ், நிர்மல், முத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேவகோட்டை உதவி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிபதி வெங்கடாஜலம் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் 7 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டதுடன், கொள்ளையடிக்க அவர்கள் பயன்படுத்திய காரை அரசுடமையாக்கவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications