சென்னை ரயிலில் மயக்க பிஸ்கட் கும்பல் கைவரிசை

Subscribe to Oneindia Tamil


சென்னை: மும்பையிலிருந்து சென்னை வந்த ரயிலில் பயணம் செய்தவருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மும்பையிலிருந்து சென்னை வந்த மும்பை மெயில் ரயிலின் எஸ்-2 கோச்சில் ஒரு வாலிபர் மயக்க நிலையில் கிடந்தார்.

பயணிகள் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தவுடன் அவர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு நினைவு திரும்பியது.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,

அவர் மும்பையை சேர்ந்த அப்துல் காதர் (28) என்றும், சென்னையில் நடக்கவிருந்த ஒரு நேர்காணலில் கலந்து கொள்ள சென்னை வந்ததும் தெரியவந்தது.

குண்டக்கல் என்ற இடத்தில் ரயில் நின்றபோது ஏறிய சிலர், அப்துல் காதருடன் பேச்சுக் கொடுத்தவாறு மயக்க பிஸ்கட் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

பின்னர் அவரிடம் இருந்த பாஸ்போர்ட், ரூ.3,000 பணம் ஆகியவற்றை அந்த மயக்க பிஸ்கட் கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+