இந்திய கோழி இறைசிக்கு ஓமனில் தடை நீக்கம்
மஸ்கட்: இந்தியாவில் பறவை காய்ச்சல் நோய் இல்லையென்று உலக விலங்குகள் அமைப்பு கொடுத்த அறிக்கையையடுத்து ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு விலக்கியுள்ளது.
இந்தியாவில் பறவை காய்ச்சல் நோய் பரவியதை தொடர்ந்து இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு பல நாடுகள் தடை விதித்தன.
இந்த பறவை காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்டன. இதையடுத்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து பறவை காய்ச்சலை ஒழித்தது.
இந்தியாவில் பறவை காய்ச்சல் இல்லையென்று மத்திய அரசு கூறினாலும் பல நாடுகள் தொடர்ந்து கோழிக்கறி, முட்டை போன்றவற்றை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டன.
இந் நிலையில் உலக விலங்குகள் நல அமைப்பு இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிக்கை கொடுத்தது. இந்த அறிக்கையை ஓமன் நாட்டில் உள்ள இந்த தூதர் அனில் வாத்வா, அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சர் ஷேக் சலீம் பின் ஹிலாலால் கலீலியிடம் நேற்று வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிக்கறி மற்றும் முட்டைகள் மீதான தடையை ஓமன் நாட்டு அரசு விலக்கிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications