பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: டெல்லியில் தங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ராஜஸ்தான் இல்லத்தில் கடும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளார் தஸ்லிமா.
பல ஆண்டுகளுக்கு முன்பு லஜ்ஜா என்ற நூலை எழுதப் போக வங்கதேசத்தில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் தஸ்லிமா. முஸ்லீம் அடிப்படைவாதிகள், தஸ்லிமாவுக்கு பாத்வா விதித்தனர். அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது. இதையடுத்து வங்கதேசத்திலிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் தஸ்லிமா.
கொல்கத்தாவில் தங்கியிருந்த அவருக்கு எதிராக இந்தியாவிலும் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின. சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் தஸ்லிமாவை அடிக்கப் பாய்ந்தனர்.
இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு தஸ்லிமாவுக்கு எதிராக கொல்கத்தாவில் பெரும் கலவரம் மூண்டது. ராணுவத்தை வரவழைக்கும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இதையடுத்து கொல்கத்தாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் தஸ்லிமா.
அங்கிருந்து ஜெய்ப்பூர் சென்ற தஸ்லிமாவை ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூரில் தங்க வைக்காமல் டெல்லிக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்ட தஸ்லிமா தற்போது அங்குள்ள ராஜஸ்தான் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தஸ்லிமா தங்கியுள்ள ராஜஸ்தான் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் யாரும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதலில் தஸ்லிமாவை டெல்லிக்கு வெளியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி ராஜஸ்தான் இல்லத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். உள்துறை அமைச்சகம் தஸ்லிமாவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த இடத்திலும் கூட தஸ்லிமா தற்காலிகமாகத்தான் தங்க வைக்கப்பட்டுள்ளார். விரைவில் வேறு ஒரு நிரந்தர இடத்திற்கு அவர் மாற்றப்படக் கூடும் என்று தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை முதல் பல்வேறு இடங்களுக்கும் மாற்றப்பட்டு வருவதால் தஸ்லிமா மனதளவில் மிகவும் நொந்து போயுள்ளார். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று விரக்தியுடன் கூறியுள்ளார் தஸ்லிமா.
ராஜஸ்தான் இல்லத்தில் இன்று காலை முதல் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications