விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு மையம் தகர்ப்பு

சமீப காலமாக விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை உக்கிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் உள்ள தர்மாபுரத்தில் விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை விமானப் படையினர் குண்டு வீசித் தாக்கினர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை கிளிநொச்சியில் உள்ள தர்மாபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு மையத்தின் மீது விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
இதில் அந்த மையம் சேதமடைந்தது. இந்த மையத்தில்தான் புலிகளின் தலைவர்கள் அடிக்கடி கூடி ஆலோசனை நடத்துவர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதல் முழு வெற்றி பெற்றுள்ளதாக தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
7 அப்பாவிகள் பலி - புலிகள்:
இருப்பினும் இந்தத் தகவலை மறுத்துள்ள விடுதலைப் புலிகள், விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 அப்பாவிகள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைநந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் தினம் - கொழும்பில் உஷார்:
இதற்கிடையே, வருகிற 27ம் தேதி மாவீரர் தினம் வருகிறது. அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்தவுள்ளார். அப்போது முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை அவர் வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவீரர் தினத்தையொட்டி புலிகள் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற அச்சம் கொழும்பில் நிலவுகிறது. இதையடுத்து கொழும்பு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications