தண்டவாளத்தில் விழுந்த வயர் - ரயில் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்திற்கு நேற்று சரக்கு ரயில் ஒன்று கிளம்பியது. திருவள்ளூர், புட்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது, அப்போது சரக்கு ரயிலுக்கு மின்சாரம் வரும் கம்பி, மின் வயரில் அழுத்தமாக உராய்ந்ததால் வயர் அறுந்து விழுந்தது.
இதையடுத்து அந்த சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து ரயில் சேலத்திற்கு புறப்பட்டது.
மின்சார வயர் அறுந்து விழுந்ததால் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் அறுந்து விழுந்த வயரை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நான்கு மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications