உரிமைப் பிரச்சினை: விளக்கமளிக்க ஜெ.வுக்கு அவகாசம்!
Subscribe to Oneindia Tamil

அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக கூறி பேட்டி அளித்தார் ஜெயலலிதா. இதையடுத்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உரிமைப் பிரச்சனை கொண்டு வந்தார்.
இதை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுப்பி உத்தரவிட்டார். இதையடுத்து உரிமைக் குழு கூடி, விளக்கம் கேட்டு ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், தன் மீதான உரிமைக் குழு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தலைமையில் உரிமை குழு மீண்டும் கூடியது. ஆனால் ஜெயலலிதா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து மேலும் ஒரு மாதம் கால அவகாசம் அளிக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications