காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
திருச்சி அருகே உள்ள சர்க்கார்பாளையம் என்ற இடத்தில் உள்ள காவிரி ஆற்றில் இர்வின் (20), கண்ணன் (19) ஆகிய இரு இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் குளிக்கச் சென்றனர்.
அப்போது கண்ணனும், இர்வினும் நீரில் மூழ்கினர். இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் இறந்து விட்டனர்.
இருவரில் இர்வினின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது. கண்ணனின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications