தஸ்லிமா நஸ்ரின் ரகசிய இடத்திற்கு மாற்றம்

வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். கொல்கத்தாவில் வசித்து வந்த அவருக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்தனர். இது பெரும் வன்முறையாக மாறியது.
இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்திலிருந்து தஸ்லிமா வெளியேற்றப்பட்டார். ராஜஸ்தான் சென்ற அவரை, அங்கு தங்க வைத்தால் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூரிலிருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
டெல்லியில் உள்ள ராஜஸ்தான் இல்லத்தில் தஸ்லிமா தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், தஸ்லிமா வேறு ஒரு ரகசிய இடத்திற்கு திடீரென மாற்றப்பட்டார். இரவு 12.45 மணியளவில் அவரை பலத்து பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
தஸ்லிமாவின் பாதுகாப்பு கருதியே அவரை ரகசிய இடத்திற்கு அதிகாரிகள் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications