அண்ணா நிதியுதவி அளித்துக் கட்டிய பள்ளி இடிந்தது
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள, அறிஞர் அண்ணா நிதியுதவி அளித்துக் கட்டப்பட்ட பள்ளிக்கூட கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் வகுப்பில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
வாலாஜாபாத்தில் உள்ள அரசுப் பள்ளி கடந்த 1942ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பள்ளியைக் கட்டுவதற்காக அறிஞர் அண்ணா நாடகம் நடத்தி அதன் மூலம் பணம் வசூலித்துக் கொடுத்தார். அந்த நிதியை வைத்துத்தான் இக்கட்டடம் கட்டப்பட்டது.
காலப் போக்கில் பள்ளிக் கட்டடம் முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாணவர்கள் காலையில் காலை வழிபாட்டுக்காக மைதானத்தில் குழுமியிருந்தனர். அந்த சமயத்தில் 10ம் வகுப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தக் கட்டடத்திற்குப் பதில் சமீபத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அதை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications