மலேசிய இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு சு.சுவாமி கண்டனம்
சென்னை: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது மலேசியப் போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பதற்கு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய இந்தியர்கள் மீதான தாக்குதல் குறித்து இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இரண்டாம் தர குடிமக்களாக அவர்கள் நடத்தப்படுவது கடுமையாக கண்டித்தக்கது. நிரந்தர அடிமைகள் போல அவர்கள் நடத்தப்படும் நிலை அங்கு நிலவுகிறது.
மனித உரிமை ஆர்வலர்களான உதயக்குமார், கணபதி ராவ், வாய்தா மூர்த்தி உள்ளிட்டோரை மலேசிய அரசு கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications