பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஜப்பானில் நிலநடுக்கம் - வீடுகள் ஆடின
மெக்சிகோ சிட்டி: பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஜப்பான் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. வீடுகள், கட்டடங்கள் ஆடியதால் மக்கள் பீதியடைந்தனர்.
மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதிகளில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக ஆடின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானில் நிலநடுக்கம்:
ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இவாகி நகருக்கு வடகிழக்கில் 45 மைல் தொலைவில் இந்திய நேரப்படி நேற்றிரவு 7.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.
பிலிப்பைன்ஸிலும் ...
இதேபோல பிலிப்பைன்ஸிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் மணிலா, லூசான் தீவில் உள்ள பல நகரங்களில் கட்டடங்கள் ஆடின.
நிலநடுக்கம் 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மணிலாவில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications