ஆசிரியர்களுடன் இணைத்து தவறாக பேசியதால் மாணவி தற்கொலை
கிருஷ்ணகிரி: பள்ளியில் வேலை பார்க்கும் பயிற்சி ஆசிரியர்களுடன் தன்னை ஆசிரியை தவறாக இணைத்து பேசியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணியனின் மனைவி புஷ்பா. மகள் சுடர்விழி. சுப்பிரமணியன் மத்திய ரிசர்வ் போலீஸில் வேலை பார்த்து வருகிறார். புஷ்பா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.
சுடர்விழி கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்தப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர்களாக இரு ஆண் ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்கள் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உடற் பயிற்சி வகுப்பு நேரத்தின்போது மட்டும் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த ஆசிரியர்களுடன் சுடர்விழி சகஜமாக பழகி வந்துள்ளார். இதை ஆசிரியை லதா மற்றும் சுடர்விழி படிக்கும் வகுப்பின் லீடர் தனுஜா ஆகியோர் கண்டித்துள்ளனர்.
மேலும் மற்ற மாணவிகள் யாரும் சுடர்விழியுடன் பேசக் கூடாது என்றும் ஆசிரியை லதா
கூறியுள்ளார்.
இதையறிந்த சுடர்விழி மனம் உடைந்தார். நேற்று முன்தினம் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவர் படுக்கை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சுடர்விழியின் தாய் புஷ்பா, தனது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறியழுதார்.
தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சுடர்விழியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுடர்விழி இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த
கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், நான் கூடைப்பந்து பயிற்சியாளரிடம் சோஷியலாகத்தான் பழகி வந்தேன். இது எனது பள்ளி ஆசிரியையின் பார்வைக்கும், வகுப்பு லீடர் தனுஜாவின்
பார்வைக்கும் தவறாக தெரிந்தது. இதனால் என்னுடன் சக மாணவிகள் எவரும் பேசக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதைக் கேட்டு எந்த மாணவியும் என்னுடன் பேசுவதில்லை. இது என்னை மிகவும் பாதித்தது. எனது கஷ்டத்தை எவரிடமும் சொல்ல முடியவில்லை. இத்தனை சோகத்துடன்
என்னால் வாழப் பிடிக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்.
எனது சாவுக்கு பள்ளி ஆசிரியையும், வகுப்பு லீடருமே காரணம் என்று சுடர்விழி எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீசார் பள்ளி ஆசிரியை லதா மற்றும் மாணவி தனுஜா ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications