ஆசிரியர்களுடன் இணைத்து தவறாக பேசியதால் மாணவி தற்கொலை
கிருஷ்ணகிரி: பள்ளியில் வேலை பார்க்கும் பயிற்சி ஆசிரியர்களுடன் தன்னை ஆசிரியை தவறாக இணைத்து பேசியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணியனின் மனைவி புஷ்பா. மகள் சுடர்விழி. சுப்பிரமணியன் மத்திய ரிசர்வ் போலீஸில் வேலை பார்த்து வருகிறார். புஷ்பா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.
சுடர்விழி கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்தப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர்களாக இரு ஆண் ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்கள் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உடற் பயிற்சி வகுப்பு நேரத்தின்போது மட்டும் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த ஆசிரியர்களுடன் சுடர்விழி சகஜமாக பழகி வந்துள்ளார். இதை ஆசிரியை லதா மற்றும் சுடர்விழி படிக்கும் வகுப்பின் லீடர் தனுஜா ஆகியோர் கண்டித்துள்ளனர்.
மேலும் மற்ற மாணவிகள் யாரும் சுடர்விழியுடன் பேசக் கூடாது என்றும் ஆசிரியை லதா
கூறியுள்ளார்.
இதையறிந்த சுடர்விழி மனம் உடைந்தார். நேற்று முன்தினம் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவர் படுக்கை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சுடர்விழியின் தாய் புஷ்பா, தனது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறியழுதார்.
தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சுடர்விழியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுடர்விழி இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த
கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், நான் கூடைப்பந்து பயிற்சியாளரிடம் சோஷியலாகத்தான் பழகி வந்தேன். இது எனது பள்ளி ஆசிரியையின் பார்வைக்கும், வகுப்பு லீடர் தனுஜாவின்
பார்வைக்கும் தவறாக தெரிந்தது. இதனால் என்னுடன் சக மாணவிகள் எவரும் பேசக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதைக் கேட்டு எந்த மாணவியும் என்னுடன் பேசுவதில்லை. இது என்னை மிகவும் பாதித்தது. எனது கஷ்டத்தை எவரிடமும் சொல்ல முடியவில்லை. இத்தனை சோகத்துடன்
என்னால் வாழப் பிடிக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்.
எனது சாவுக்கு பள்ளி ஆசிரியையும், வகுப்பு லீடருமே காரணம் என்று சுடர்விழி எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீசார் பள்ளி ஆசிரியை லதா மற்றும் மாணவி தனுஜா ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications