பணத்திற்காக சங்கரன்கோவில் அருகே விவசாயி கொலை
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே பணத்திற்காக விவசாயி ஒருவரை கொலை செய்து கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்கரன்கோவில், பனவடலிச்சத்திரம் திருமலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி மாரியராஜா (40).
இவருக்கும் தேவர் குளத்தைச் சேர்ந்த சிலருக்கும் பணம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சிலர் திருமலாபுரம் அருகே சொக்கலிங்கபுரத்திற்கு மாரிராஜாவை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பணம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்ததாகத் தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் மாரிராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.












Click it and Unblock the Notifications