டிச. 3 வரை ஜோதி மீது நடவடிக்கை இல்லை - அரசு வக்கீல்
சென்னை: சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜ்யசபா அதிமுக எம்.பியும், வழக்கறிருமான என்.ஜோதி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை அவர் கைது செய்யப்பட மாட்டார் என தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாத் ராவ் என்பவர், ஜோதி மீது சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜோதி, பலமுறை டெல்லிக்கு பயணம் செய்தார். காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பாக அவர் டெல்லிக்குப் பயணம் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் காவிரி நடுவர் மன்றம் தொடர்பான எந்த வழக்கிலும் அரசு சார்பில் அவர் அதிகாரப்பூர்வமாக வக்கீலாக நியமிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் அவர் தமிழக அரசுப் பணத்தில் பலமுறை விமானத்தில் டெல்லிக்குச் சென்றுள்ளார். தமிழக அரசின் டெல்லி இல்லத்திலும் தங்கியுள்ளார்.
இந்த வகையில் அவர் பல லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறிய அமர்நாத் ராவ், சிபிசிஐடியிலும் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென சிபிசிஐடி போலீஸார் அமர்நாத் ராவின் புகாரின் பேரில் ஜோதி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று ஜோதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான உதவி அரசு வழக்கறிஞர் ராஜா இளங்கோ, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாக கோரினார். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை ஜோதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
அப்போது அமர்நாத் ராவ் ஆஜராகி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஜோதிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரியிருந்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி சுதந்திரம், இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications