For Daily Alerts
Just In
ஹஜ் யாத்திரை இதுவரை 17 இந்திய யாத்ரீகர்கள் மரணம்
ஸ்ரீநகர்: சவூதி அரேபியாவில் புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த இந்தியர்கள் இதுவரை 17 பேர் மரணமடைந்துள்ளனர்.
புனித ஹஜ் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை ஹஜ் யாத்திரையாக மெக்கா, மெதீனா சென்றுள்ள இந்தியர்களில் 17 பேர் மரணமடைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் மாரடைப்பால் இறந்தவர்கள் ஆவர்.
இறந்தவர்களில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 3 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், ஆந்திராவைச் சேர்ந்த தலா 2 பேரும் உயிரிழந்தனர். இதுதவிர தமிழ்நாடு, குஜராத், டெல்லியைச் சேர்ந்த தலா ஒருவரும் சவூதி யாத்திரையின்போது மரணமடைந்தவர்கள் ஆவர்.
இறந்த 17 பேரில் ஐந்து பேர் பெண் யாத்ரீகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 19:50 [IST]