பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன் - கல்யாண்சிங்
மதுரா (உத்தரப்பிரதேசம்): பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுவதாக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.
மதுராவில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில்,
அயோத்தியில் 15 வருடங்களுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு பெருமையாக உள்ளது.
தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கு ராமர் கோவில் இருந்தது என தெரிவித்துள்ளார்கள். ஆதாரம் இல்லாமல் நான் பேசவில்லை. அதை நிரூபிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்ததுதான் உ.பியில் பாஜக செய்த மிகப் பெரிய தவறு. எப்போது நான் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்ததில்லை. இப்போது பாஜகவும் அதை உணர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மாஃபியா கும்பலையும், அடியாட்களையும் வைத்து தான் மாயாவதி ஆட்சி நடத்தி வருகிறார். அக்கட்சியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் மீது கொலை, கற்பழிப்புப் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
உமா பாரதி மீண்டும் பாஜகவுக்கு திரும்பினால் கட்சி பலப்படும். அதுதொடர்பான வழிமுறைகளை பாஜக தலைமை காண வேண்டும் என்றார் கல்யாண் சிங்.












Click it and Unblock the Notifications