ஆலடி அருணா கொலை வழக்கு கைதிகள் அறையில் 5 செல்போன்கள் பறிமுதல்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆலடி அருணா கொலை வழக்கு கைதிகளின் அறைகளிலிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தின் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், கைதிகளிடம் செல்போன் மற்றும் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அனைத்து சிறைச்சாலைகளிலும், சிறைத்துறை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் கஞ்சா, செல்போன்கள் போன்றவை சிக்கி வருகின்றன. சென்னை மத்திய சிறையில் 2 தினங்களுக்கு முன்னர் ஒரு விஐபி கைதியிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 1,500 பேர் உள்ளனர். இங்கு கைதிகள் செல்போன்களை பயன்படுத்தி வருவதாக உயரதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதில் குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் உள்ள அறைகளில் செல்போன்களின் நடமாட்டம் அதிகமாக
இருப்பதாக அறிக்கை அனுப்பினர்.
இதையடுத்து சிறை துறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் சிறை காவலர்கள் தண்டனை கைதிகளின் 1வது பிளாக்கிலும், புதிய கட்டிடத்திலும் சோதனை நடத்தினர்.
அதிகாலை 3 மணி வரையிலும் சோதனை நடந்தது. 1வது பிளக்கில் முன்னால் அமைச்சர் அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேல்துரை, பாலமுருகன், வக்கீல் விஜயன், அழகர் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இவர்களின் அறைகளில் இருந்து 5 நவீன செல்போன்கள், அதற்கான பேட்டரிகள் 7, சார்ஜர்கள் 7, சிம்கார்டு 6 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஒரு ஆண்டாக செல்போன்கள் மூலம் இவர்கள் வெளியில் உள்ளவர்களிடம் பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து வேல்துரை உள்பட சில கைதிகள் வேறு மத்திய சிறைக்கு மாற்றப்படலாம் என சிறை துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications