ஊனமுற்ற சிறுமியை கர்ப்பமாக்கி சீரழித்த பால் வியாபாரி
நெல்லை: மாணவிகள் விடுதிக்குள் புகுந்து அனாதை சிறுமியை கற்பழித்து சீரழித்துள்ளார் பால் வியாபாரி ஒருவர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே அனாதை சிறுமிகள் தங்கி படிக்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தாயை இழந்த ஊனமுற்ற 14 வயது மாணவி தங்கி பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
விடுதிக்கு பால் ஊற்ற வரும் 50 வயது பால் வியாபாரி ஒருவர் அந்த மாணவி மீது கண்ணாக இருந்துள்ளார். ஒருநாள் மாணவியை பயமுறுத்தி பாலியல் பலத்காரம் செய்துள்ளார். பின்னர் அதை சொல்லி மிரட்டி பலமுறை உறவு கொண்டுள்ளார்.
இந்நிலையில் மாணவி கர்ப்பமுற்றதால் விஷயம் விடுதி கண்காணிப்பாளருக்கு தெரிய வந்தது. அவர் இதுகுறித்து மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.
மாணவியை கர்ப்பமாக்கிய பால் வியாபாரி மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பால் வியாபாரியை பிடித்து விசாரித்ததில், அவர் இதுபோல் பல மாணவிகளிடம் ஆசையாக பேசி அன்பளிப்பு பொருட்கள் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் பாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊனமுற்ற மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளானது பற்றி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரித்தபோது சரியான தகவல்களை அளிக்க மறுத்து விட்டனர். நேற்று இரவில் மாணவி, அவரது தந்தை, பால் வியாபாரி ஆகியோரை விசாரித்த போலீசார் விஷயத்தை மூடி மறைக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications