மார்ச் 3ம் தேதி பிளஸ்டூ தேர்வுகள் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.
பிளஸ்டூ தேர்வுக்கான கால அட்டவணையைத் தயாரிக்கும்போது உள்ளூர் விடுமுறைகள் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுவது வழக்கம். இதைத் தவிர்க்க இந்த முறை முன்கூட்டியே பிளஸ்டூ தேர்வு கால அட்டவணையை மாநில தேர்வுத்துறை இயக்குநரகம் தயாரித்து விட்டது.
இந்தக் கால அட்டவணை முன் கூட்டியே அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடமும் ஆலோசனை பெற்று இந்த உத்தேச இறுதி கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 3ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வை ஆறரை லட்சம் பேர் எழுதவுள்ளனர். இதற்காக 1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
முழுமையான தேர்வு அட்டவணை இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.