For Daily Alerts
Just In
போதையில் வீட்டைக் கொளுத்திய குடிமகன் - 3 வீடுகள் சாம்பல்
ஆக்ரா: ஆக்ராவில், குடி போதையில் தனது வீட்டை தீவைத்துக் கொளுத்தி விட்டார் ஒரு குடிகாரர்.
பத்தேபாத்தைச் சேர்ந்த ரக்சபால் என்ற அந்த நபர் அளவுக்கு மீறி மது அருந்தினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பினார். குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், தீப்பெட்டியை எடுத்து, தீக்குச்சியைக் கொளுத்தி வீட்டில் இருந்த துணிகள் மீது போட்டார்.
பின்னர் வெளியே வந்தார். அவர் கொளுத்திப் போட்ட தீக்குச்சியால் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அந்தத் தீ கொளுந்து விட்டுப் பரவி பக்கத்தில் இருந்த 2 குடிசைகளுக்கும் பரவியது.
சிறிது நேரத்திலேயே 3 வீடுகளும் எரிந்து சாம்பலாயின. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 18:33 [IST]