ஒற்றுமையுடன் வாழ்கிறோம்-மலேசிய தமிழ் அமைச்சர்
சென்னை: மலேசியாவில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் அங்கு இந்து சங்கங்களை சேர்ந்த சில தலைவர்கள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர் என அந் நாட்டின் பெராக் மாநில அமைச்சரும் தமிழருமான ராஜு கூறியுள்ளார்.
மலேசியாவின் பெராக் மாநிலத்தின் (Perak State) முதல்வர் திராஜா கசாலி. இவரது தலைமையில் கல்வியமைச்சரும் தமிழருமான டத்தோ ராஜூ மற்றும் கல்வி நிபுணர்கள் அடங்கிய குழு சென்னை வந்துள்ளது.
பெராக் மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள பல்கலைக்கழகம் தொடர்பாக தமிழக கல்வியாளர்களின் ஆலோசனையைப் பெற இந்தக் குழு வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அணைச்சர் ராஜூ நிருபர்களிடம் பேசுகையில்,
மலேசியாவில் மலேசியர்கள் தவிர்த்து தமிழர்கள், இலங்கை மக்கள், சீனர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் அங்கு இந்து சங்கங்களை சேர்ந்த சில தலைவர்கள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.
மலேசிய சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையதல்ல.
எல்லா நாடுகளிலும் ஏற்றத் தாழ்வு உண்டு. இந்தியாவில் கூட ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. அதே போலத்தான் மலேசியாவிலும் உள்ளது. இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
இந்த ஒற்றுமையை சீர்குலைக்க ஒரு சிறிய கும்பல் முயற்சிக்கிறது. கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications