கணவர் கொடுமை-மகளை கொன்று பெண் தற்கொலை
மதுரை: கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தனது 3 வயது மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டு, தானும் விஷண் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் 28 வயதுப் பெண்.
மதுரை, மீனாட்சிபுரத்தில் வசித்து வந்தவர் வசந்தி. இவரது கணவர் விருமாண்டி, மகள் சுவேதா (30 .
வசந்திக்கும், விருமாண்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். விருமாண்டி கூலி வேலை பார்த்து வருகிறார். இதனால் சரியான வருமானம் இல்லை. கிடைக்கும் வருமானத்தையும் அவர் ஒழுங்காக வசந்தியிடம் தருவதில்ைல என்று கூறப்படுகிறது.
கணவருடன் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் மனம் உடைந்த வசந்தி நேற்று தனது மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றார். பின்னர் தானும் விஷத்தை அருந்தினார்.
இருவரும் பேச்சு மூச்சின்றி கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விருமாண்டி தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.