மலேசியத் தமிழர்களை விடுவிக்க உதவ பிரதமருக்கு வைகோ கோரிக்கை
சென்னை: மலேசிய அரசால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க தூதரக ரீதியில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் வசிக்கும் பெரும்பாலான பூர்வீக இந்தியர்கள் தமிழர்கள் ஆவர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அங்கு சம உரிமை கோரி போராடி கைதாகியுள்ள தமிழர்களை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும்.
கோலாலம்பூரில் நவம்பர் 25ம் தேதி நடத்திய அமைதிப் பேரணிக்குப் பின்னர் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கக் கூட முன்வராத மலேசிய அரசு, அவர்களை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும், தமிழர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையையும் விடுத்து வருகிறது.
எனவே இந்திய அரசு இதில் தலையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications