திமுக வேன் மோதி பலியான 2 ஏட்டுகள் குடும்பத்திற்கு நிதியுதவி, அரசு வேலை
திருநெல்வேலி: நெல்லை அருகே திமுக தொண்டர்கள் வந்த வேன் மோதி பலியான 2 ஏட்டுகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்திற்கு ஒரு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற திமுக மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக கங்கை கொண்டான் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த தலைமைக் காவலர்கள் அய்யாசாமி (50), காளிசந்தர் (47) ஆகியோர் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அழகிய பாண்டியபுரம் என்ற இடத்தில் சென்றபோது, சென்னையில் இருந்து திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் வேன் நேருக்கு நேராக மோதியது. இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நிதியுதவி - அரசு வேலை:
திமுக தொண்டர்கள் சென்ற வேன் மோதி 2 தலைமைக் காவலர்கள் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், இருவரது குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒரு நபருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications