கிரஹலட்சுமி- வேணுபிரசாத் விவகாரத்து மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil


சென்னை: நடிகர் பிரசாந்த்தின் மனைவி கிரஹலட்சுமியின் முதல் கணவர் நாராயணன் வேணுபிரசாத் தாக்கல் செய்த விவகாரத்து மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரசாந்துக்கும், கிரஹலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கருத்து வேறுபாட்டால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இந் நிலையில் கிரஹலட்சுமிக்கும் வேணுபிரசாத்துக்கும் திருமணம் நடந்ததை தன்னிடம் மறைத்துவிட்டதாகக் கூறி விவாகரத்து கோரி மனு செய்தார் பிரசாந்த்.

இந்நிலையில் நாராயணன் வேணுபிரசாத் தனக்கும், கிரஹலட்சுமிக்கும் 1998ம் ஆண்டு பதிவு திருமணம் நடந்துள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்தார்.

இதையடுத்து தனக்கும், கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி பிரசாந்த நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதற்கிடையில் கிரகலட்சுமியிடம் இருந்த விவகாரத்து கேட்டு நாராயணன் வேணுபிரசாத்தும் மனுத்தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் கிரகலட்சுமியும், வேணுபிரசாத்தும் ஆஜராகினர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை 2008 பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+