மலேசியா: குடும்பத்தினருடன் பேச சிறையில் உள்ள 5 தமிழர்களுக்கு அனுமதி
கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினர் சந்தித்துப் பேச மலேசிய அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
மலேசியாவில் சம வாய்ப்பு கோரி போராட்டத்தில் குதித்துள்ள இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார், கங்காதரன், மனோகரன், வசந்தகுமார், கணபதிராவ் ஆகிய 5 பேர் சமீபத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோலாலம்பூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமுண்டிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களைப் பார்க்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படும் என மலேசிய உள்துறை துணை அமைச்சர் பூ ஆ கியோ கூறியுள்ளார்.
இதுகுறித்து பூ ஆ கியோ கூறுகையில், பிற கைதிகளைப் போலவே ஹிண்ட்ராப் தலைவர்களும் நடத்தப்படுவர். அவர்களை, அவர்களது குடும்பத்தினர், விதிமுறைகளின்படி முன்கூட்டியே விண்ணப்பித்து விட்டுப் போய் பார்க்கலாம். அவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி தரப்படும் என்றார்.
கைது செய்யப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து தமிழர்களுக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காலவரையின்றி சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போலீஸ் உதவியை நாடும் மலேசியா:
இதற்கிடையே, மலேசியா வாழ் தமிழர்களை கண்காணிக்க சர்வதேச போலீஸின் உதவியை மலேசியா அரசு நாடவுள்ளது.
இன்டர்போல், ஈரோபோல் உள்ளிட்ட சர்வதேச போலீஸின் உதவியை நாடவுள்ளது மலேசியா. மேலும், ஹிண்ட்ராப் அமைப்பின் நிறுவன தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தி தற்போது உலக நாடுகளின் ஆதரவைப் பெற சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால் அவரைப் பிடிக்கவும் இன்டர்போல் உதவியை மலேசிய அரசு நாடவுள்ளதாக தெரிகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications