For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

By Staff
Google Oneindia Tamil News


திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்ரீநம்பெருமாள் நாளை காலை 6 மணிக்குமோகினி அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு செய்து அர்ச்சுன மண்டபம் சேர்கிறார்.

காலை 7 மணி முதல் திரை, பொதுஜன சேவை, அலங்காரம், அரையர் 2வது சேவை ராவணவதம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், உபயகார மரியாதை நிகழ்ச்சிகள் முடிந்து மீண்டும் பொதுஜன சேவையுடன் மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படு ஆரியப்படாள் வாசல் வருகிறார்.

அங்கிருந்து திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருமண்டபம் சேர்ந்து, ஆழ்வாராதிகள் மரியாதையாகி, கருமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார்.

விழாவில் நாளை அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. இந்நிகழ்ச்சி காலை 4 மணி முதல் 6 மணி வரை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். கோவிலில் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X